செவ்வாய், 4 மே, 2010

எப்போது?



















நேசத்துடன்
என்னிடம் நீ பிரியத்தை சொன்னது எப்போது?

மொழியறியாத் தெருக்களில்
திசைதெரியாது அலைந்தேனே
அப்போதா?

பரிவுடன்
என்னை நீ தொட்டது எப்போது?

எரியும் வீட்டிலிருந்து
துள்ளித் தெறித்து வெளியேறினேனே
அப்போதா?

கரிசனத்துடன்
என் கைகளைப் பற்றியது எப்போது?

எவருக்கும் தர எதுவுமில்லாமல்
என் வலது கரத்தைத் துண்டித்தேனே
அப்போதா?

கனிவுடன்
என் முகத்தைப் பாத்தது எப்போது?

பயத்தின் இருளில் யாரும்
பார்த்துவிடக் கூடாமல் மறைந்திருந்தேனே
அப்போதா?

உன்னை விடப் பெருங்கருணையுடன்
நானிருந்த அமர நொடிகளில்
இல்லாமற் போனாயே
அது மறதியா, பதுங்கலா?