வெள்ளி, 25 ஜூன், 2010

ஆப்பிள்



















'துக்கம்
பாதி உரித்த ஆப்பிள்
அது
ஓர் உருவகமோ
ஒரு கவிதையோ அல்ல
அங்கே
அது
இருந்து கொண்டிருக்கிறது'

என்றார் தனிக்காவா.

'இங்கே
இரண்டு ஆப்பிள்கள் இருக்கின்றன
ஒன்று குளிர்பதனப் பெட்டியில்
இரண்டாக நறுக்கப்பட்ட மற்றொன்று உணவு மேஜையில்.

குளிர்ந்த ஆப்பிள் பாதுகாப்பாக வியர்த்திருக்கிறது
நறுக்கிய ஆப்பிள் நிறம் பிறழ்ந்து கிடக்கிறது '

இதில்
எது துக்கம்? எது மகிழ்ச்சி?'

தனிக்காவாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்.

'அட, போங்கப்பா,
பசித்திருக்கிறேன் இப்போது
எதைத் தின்ன?
துக்கத்தையா? மகிழ்ச்சியையா?'

எங்களைக் கேட்கிறாய் நீ.

@

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக