வியாழன், 6 நவம்பர், 2014

ஒரு கவிதையின் இரு நிறங்கள்




சீனக் கவிஞர் து மு ( Du Mu  - 803 - 852 ) ஒரு கவிதையின் இரண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள். முதலாவது பொழிபெயர்ப்பு டேவிட் யங்கும் ஜியான் ஐ லின்னும் இணைந்து செய்தது. இரண்டாவது பைன்னருடையது.

பிரிவு

ளவற்ற அன்பு எப்படியோ
அன்பின்மையாக மாறிவிடுகிறது.

இந்தப் பிரியாவிடைக் குப்பியைக் கடந்து
ஒரு சிநேகப் புன்னகையைக்கூட
நம்மால் சிந்த முடிவதில்லை.

இந்த மெழுகுவத்தியால் மட்டுமே
ஏதோ உணர்ச்சிகளை
வெளிப்படுத்த முடியும்போல.

இரவு முழுவதும்
சின்னதாக மெழுகுக் கண்ணீரை
வடித்துக் கொண்டிருக்கிறது.

                                                                         *   *  *


ழ்ந்த அன்பு எவ்வாறு ஆழ்ந்த அன்பாகத் தோன்றும்?
வழியனுப்பு விருந்துகளில் அது எவ்வாறு புன்னகைக்க முடியும்?
நமது சோகத்தை இந்த மெழுகுவத்தியால்கூட உணரமுடிகிறது
நம்மைப்போலவே இரவு முழுவதும் அழுகிறது.              


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக