திங்கள், 6 ஆகஸ்ட், 2018





திருவனந்தபுரம் நீலகண்ட சிவன் சங்கீத சபையில் நேற்று ( 5.08.2019 ) சஞ்சய் சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சி. சஞ்சயின் கச்சேரி அற்புதமாக இருந்தது என்பது.செம்பரிதி ஒளி பெற்றது; பைந்நறவு சுவை பெற்றது என்று சொல்வதுபோல பொருளற்றது. பொதுவாக அவர் அற்புத சித்தர்.  சமயங்களில் அதி அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுபவர். நேற்றைய நிகழ்ச்சியில்  என்னைப் பரவசப்படுத்திய இரண்டு அற்புதங்கள்  சஞ்சய் பாடிய மைசூர் வாசுதேவாச்சாரி யாவின் பஹூதாரி உருப்படியும்  கீரவாணி ராகம் தானம் பல்லவியும். சஞ்சயின் பஹுதாரி இதுவரை இந்த ராகத்தில் இதுவரை கேட்ட எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய குதிரைப் பாய்ச்சல். அதுவும் சிறகுள்ள பறக்கும் குதிரையின் அபாரப் பாய்ச்சல். சிம்மேந்திர மத்திமம் என்று மனதுக்குள் நினைத்த ( நம்முடைய சங்கீத ஞானத்தின் லட்சணம் அப்படி ) ராகம் தானம் பல்லவி கீரவாணி என்று அப்புறந்தான் பிடி பட்ட து. ராகம் தானம் பல்லவியின் பல இடங்களில் உயிர் உருகித் திரளும் ஆனந்தத்தைக் கொடுத்தார் சஞ்சய். 


                                                                           கேரளகௌமுதி    நாளிதழ்    6. 08.2018


கவிஞரும் நண்பருமான ரவிகுமாரின் 'எம். டி. ராம்நாதன்' நீள்கவிதையின்  ஆங்கில மொழி பெயர்ப்பு நூலை சஞ்சய் வெளியிட நீலகண்ட சிவன் சங்கீத சபையின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தியும் நானும் பெற்றுக் கொண்டோம். மிகவும் பெருமையாக உணர்ந்த தருணம் அது. என் காலத்தின் பெரும் இசைக் கலைஞரின் கையால் ஒரு நூலைப் பெறுவது பெருமை மட்டுமல்ல; பெரும் பேறும் கூட.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக