ஞாயிறு, 6 டிசம்பர், 2009

சிந்துபாத்தின் கடற்பயணம்

சுகுமாரன்

முற்றத்துக் கையகலக் குழியில் நெளியும்
மழை மிச்சத்தில்
ஏதோ செய்துகொண்டிருந்தான் சிறுவன்.

நீர்மேல் ஒரு காகிதத் துணுக்கு
அதன் மேல் ஓர் எறும்பு.

கேட்டதற்குச் சொன்னான்:
‘கன்னித் தீவுக்கு
சிந்துபாத்தின் கப்பலை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.’

குழிக்கடலில் அப்போது
சீறிப் புரண்டது
ஒரு பேரலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக