வியாழன், 1 ஏப்ரல், 2021

கவிதை - அந்திமம்

 


     அந்திமம்

 

கடைசியாக நடந்து தீர்த்த வழியைவிடவும்

காட்சிக்கு இதமான நெடும்பாதை


கடைசியாக நனைந்து சிலிர்த்த சாரலைவிடவும்

ஆர்ப்பரித்துப் பெய்யும் பெருமழை


கடைசியாகப் புகல்தேடிய மரத்தின் நிழலைவிடவும்

கிளைபடர்த்தும் குளிர்க் கருணை 


கடைசியாகப் பருகிய ஆலகாலத்தைவிடவும்

அமுதமான பானம்


கடைசியாகச் செத்ததைக்காட்டிலும்

பேரமைதியான சாவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக