புதன், 29 ஆகஸ்ட், 2018

ஸிண்ட்ஸி மண்டேலாவின் கவிதை





ஸொவேட்டோவில் அறியப்படாத ஒரு நதி இருக்கிறது

அதில் ஓடுவது ரத்தம் என்று சிலர் சொல்கிறார்கள்
அதில்  ஓடுவது கண்ணீர் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்
ஒரு தலைவர் சொல்கிறார்
அதில் ஓடுவது நலமும் வளமுமே என்று.

ஸொவேட்டோவில் யாரும் பருகாத தண்ணீர்


ஸொவேட்டோவில்  அறியப்படாத ஒரு மரம் இருக்கிறது

அதில் காய்ப்பது துக்கம் என்று சிலர் சொல்கிறார்கள்
அதில் காய்ப்பது மரணம் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்
ஒரு தலைவர் சொல்கிறார்
அதில் காய்ப்பது நலமும் வளமுமே என்று.

ஸொவேட்டோவில் யாரும் சுவைக்காத கனி

ஸொவேட்டோவில்  ஒரு அறியப்படாத  நதி இருக்கிறது
ஸொவேட்டோவில்  ஒரு அறியப்படாத  மரம் இருக்கிறது

அந்த உடல்
அந்த ரத்தம்
இரண்டுமே அறியப்படாதவை.

*

ஸிண்ட்ஸி மண்டேலா ( Zindzi Mandela ) , வின்னி - நெல்சன் மண்டேலா தம்பதியரின் இளைய மகள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக