வெள்ளி, 24 ஜூலை, 2020

அந்த நாட்களில் ஒன்று


  
   







   







   நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்
       அதுவும் ஒன்று

கானகத்தின் அமர வாழ்வுக்குச்
சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானை
சறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டது
பொந்திடை அணில் பதறி வந்து
பச்சிலைகளைக் கொறித்துப்போட்டது
நான் அதை விழுதாக அரைத்தேன்
அணில் காயத்துக்குப் பற்றுப்போட்டது



அப்போது
வானம் ஆதுரமாகப் புன்னகை செய்தது
நூற்றாண்டுக் கடம்பமரம் மலர்மாரி பெய்தது

   மிக மிக மிக மகிழ்ச்சியாக
   நானிருந்த நாட்களில் ஒன்று அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக